30.12.17

Marurnheeswarar Temple- Thiruvanmayur


மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர்

__________________________________________



 மூலவர் -ம ருந்தீஸ்வரர், பால்வண்ண நாதர்.

அம்பாள் - திரிபுரசுந்தரி, சொக்க நாயகி.

தல விருட்சம்- வன்னிமரம்.

தல தீர்த்தம்- பாபநாசினி, அமுதவால்மீகி.

தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 214


தல வரலாறு 





கயிலை மலையில் சிவன் பார்வதி திருமணம் நடைபெறும் சமயம் திருமணத்தைக் காண எல்லோரும் அங்கு கூடியதால் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது.

இதனை சமன் செய்ய சிவபெருமான் அகத்திய முனிவரை தென்திசை அனுப்பினார்.

தென்புலம் சென்றால் தன்னால் தெய்வத் திருமணத்தைக் காண இயலாமல் போய்விடுமோ என்று சிவனிடம் முறையிட இறைவனும் அகத்தியர் விரும்பும் போது திருமணக் கோலம் காட்டி அருளுவதாக கூறினார்.

அதன்படி திருவான்மியூர் தலத்தில் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டி அருளினார்.

அகத்தியர் திருவான்மியூர் தலத்தில் தங்கி இருந்த போது வயிற்று வலியினால் அவதிப்பட்டார்.

இறைவன் அகத்தியருக்கு காட்சி கொடுத்து மருந்துகள் பற்றியும், அதன் உபயோக முறைகளைப் பற்றியும் உபதேசம் செய்து அருளினார்.

அதனாலேயே இறைவன் மருந்தீஸ்வரர் என்ற பெயருடன் இத்தலத்தில் அறியப்படுகிறார்.

சூரியனும், சந்திரனும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால், இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனி சந்நிதி இல்லை.

வன்னி மரம் 

வன்னி மரம் 


ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் உள்ள வன்னி மரமே இத்தலத்தின் தல விருட்சமாகும்.

இந்த வன்னி மரத்தினடியில் தான் அகத்தியருக்கு இறைவன் திருமணக் காட்சி கொடுத்ததாக ஐதீகம்.

வான்மீகி முனிவர் முக்திப் பேறு வேண்டி நாரதரின் ஆலோசனைப் படி இத்தலம் வந்து இந்த வன்னி மரத்தடியில்தான் சுயம்பு லிங்கத்தைக் கண்டெடுத்து வழிபட்டதாக புராண செய்திகள் கூறுகின்றன.

அகத்திய முனிவருக்காக ஒரு முறையும், வான்மீகி முனிவருக்காக ஒரு முறையும் ஆக இரண்டு முறை இறைவன் இந்த வன்னி மரத்தடியில் காட்சி கொடுத்துள்ளார்.

இந்த வன்னி மரத்தடியில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தில் ஒன்பதாம் நாளில் இறைவன் அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுத்த விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

ஆலய சிறப்பு:




ஒருசமயம் தேவலோகத்தைச் சேர்ந்த காமதேனு பிரம்மரிஷியான வசிஷ்டரிடம் சற்று அவமரியாதையாக நடந்து கொண்டது. 

அதனால் கோபம் கொண்ட வசிஷ்டர், நீ பூவுலகில் பசுவாகப் பிறப்பாய் என்று சாபமிட்டார்.

தன் தவறை உணர்ந்து வருந்திய காமதேனு வசிஷ்டரிடம் மன்னிப்பு கேட்டு, சாப விமோசனத்துக்கான வழியைக் கேட்க, "வான்மியூ ரில் எழுந்தருளியிருக்கும் சுயம்பு லிங்கத்திற்கு தினமும் பால் சொரிந்து அபிஷேகம் செய்து வா. சாப விமோசனம் கிட்டும்" என்று கூறினார்.

அதன்படியே இத்தலம் வந்து வழிபாடு செய்து, ஈசன் அருளால் சாப விமோசனம் பெற்றது காமதேனு.

பசு பால் சொரிந்து சிவலிங்கம் வெண்ணிறமாகக் காட்சி தந்ததால் இவர் *பால்வண்ண நாதர்* என்று பெயர் பெற்றார்.

அதுபோலவே, இத்தலத்திற்கு வந்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு, உலகத்திலுள்ள அனைத்து வகையான நோய்களைப் பற்றியும், அதைப் போக்கும் மருந்துகளைப் பற்றியும் ஈசன் இவருக்கு உபதேசித்தருளினார்.

அதன் காரணமாகவே ஈசனை, *மருந்தீஸ்வரர், ஔஷதநாதர்* (ஔஷதம் என்றால் மருந்து) என்று இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார்கள்.


காலம் அறிய முடியாத அந்தக்காலத்தில், அகத்தியருக்கு வந்த வயிற்றுவலியை நீக்க சித்த மருத்துவ முறைகளை, சித்துக்களின் நாயகராம் சிவனாரே வந்து போதித்த இடம்தான் திருவான்மியூர். தலம்.

இங்கு இருப்பவரே மருந்தீஸ்வரர், மருத்துவர், நோயொழிப்பவர்,  நோய்வராதும் காப்பவர். இவரைப் பார்க்கச் செல்ல பணமேது என்பார்கள் சிலர்.

திருவான்மியூர் மருத்துவரை (மருந்தீஸ்வரர் வைத்தியர்.) ஒரு முறை  தரிசிக்கச் செல்லுங்கள்.

அகிலத்தின் நாயகனாம் மருந்தீஸ்வரர் என்ற இறைவன், ஓர் ஆவின் பாலை உண்டு செழித்து கிளர்தெழுந்து நின்ற இடம்தான் இந்த திருவான்மியூர்.

வசிஷ்ட மாமுனியின் யாகத்தில் பால் சொரிய தாமதித்த காமதேனு, சாதாரணப் பசுவாக மாறி, பூலோகம் செல்ல சபிக்கப்பட்டது.

சாபம் நீங்கப் பூவுலகின் புண்ணிய க்ஷேத்திரமான திருவான்மியூர் வந்தடைந்தது அந்தத் தெய்வப் பசு.

ஓங்கி, உயர்ந்து நின்ற புற்றுகளிடையே இருந்த சுயம்புலிங்கத்தை கண்டுகொண்டது.

பாவம் நீங்க, பாலைச் சொரிந்து வழிபட்டது. ஈசனின் மீது கொண்ட பக்தியின் அவசர மேலீட்டால், லிங்கத் திருமேனி மீது தவறி கால்பட, அதை இன்றும் திருத்தழும்பாக ஏற்றுக்கொண்டு பால்வண்ண நாதராக, அன்னை திரிபுரசுந்தரியோடு காட்சிதரும் திருத்தலமே திருவான்மியூர்.

வான்மீகம் என்று சொல்லப்படும் புற்றுகள் நிறைந்த இடம் என்பதால், இது *வான்மிகியூர்* என வரலாறு உரைக்கிறது.

ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவர், தனது களவு வாழ்க்கையின் சாபங்கள் தீர இங்கு வந்து வழிபட்டார் என்பதால், வான்மீகியூர் என்றானது என்றும் ஒரு வரலாறு கூறப்படுகிறது.

வால்மீகி முனிவரின் சாபம் நீங்க, இந்த ஆலயத்தின் வடமேற்கு மூலையில் இருக்கும் வன்னி மரத்தடியில்தான் தவமிருந்து, ஈசனைத் தரிசித்து சுயம்புலிங்கத்தை பெற்றார் என்கிறது.

அது இன்றும் ஆலயத்தின் வெளிப்புறம் கிழக்கு கடற்கரை சாலையின் ஆரம்பத்தில் மார்க்கெட் அருகே இருக்கும் வால்மீகி முனிவரின் ஜீவசமாதியில் இருந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

தொண்டை மண்டலத்தின் வெகு சிறப்பான பதினெட்டு கிராமங்களில் மயிலைக்கு அடுத்து திருவான்மியூரே சிறப்பானது.

இங்குதான் ஏழாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட இந்த மருந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

பாவநாசினி, ஜன்மநாசினி என இரு திருக்குளங்களைக் கொண்டு கிழக்கு நோக்கி ஆலயம் அமைந்துள்ளது.

கணபதி, முருகர், தட்சிணாமூர்த்தி, துர்கை... என பரிவார தெய்வங்களோடு ஆலயம் சிறப்புற பிரமாண்டமாக இருக்கிறது.

சந்திரனும் சூரியனும் ஒருசேர இங்கு வந்து வழிபட்டதால், மற்ற கிரகங்கள் இங்கு மறைந்து நின்றது எனவும், அதனாலேயே இங்கு நவகிரக சந்நிதி கிடையாது என்றும் கூறப்படுகிறது.

அருள் வழங்கும் அன்னை உமையவள் இங்கு *சொக்கநாயகி* எனும் திரிபுரசுந்தரியாக நின்ற கோலத்தில் காட்சிதருகிறாள்

மனமுருகி தன்னைத் தொழுவோரிடம் பேசும் சக்திகொண்டவள் இந்த அன்னை.

பாசம், அங்குசம் தாங்கி, அபய வரத ஹஸ்தம் காட்டும் திருக்கரங்களோடு அடைக்கலம் தந்துவருபவள் அன்னை திரிபுரசுந்தரி.

அன்னையின் ஆலயத்தின் வெளிப்புறம் தூணில் இருக்கும் சரபேஸ்வரர் வெகு சிறப்பானவர். 

அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டியதும், சித்த வைத்திய முறைகளைக் கேட்டு அறிந்ததும் இந்த ஆலயத்தின் வன்னி மரத்தின் அடியில்தான்.

இதனால், இந்த வன்னி மரத்தடியில் ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி மாத பிரம்மோற்ஸவத்தில் ஒன்பதாம் நாள் ஈசன் அகத்தியருக்குக் காட்சிதருகிறார்.

முக்கியத் திருவிழாவான நடராஜரின் நடனக்காட்சியையும் ஆண்டுதோறும் வால்மீகி முனிவருக்கு காட்சி விழா நடக்கும்.

குற்றாலத்துக்குப் பிறகு திருவான்மியூரில் நடக்கும் இந்த நடனத் திருவிழாவே இங்கு மிக சிறப்பானது.

சோழர்கால கல்வெட்டுகள் பதினாறைக் கொண்டுள்ள இந்தப் பழைமையான திருத்தலத்தைத் திருநாவுக்கரசர் பெருமான், திருஞானசம்பந்த பெருமான் என இருவராலும் பாடப்பெற்றது.

இங்கிருக்கும் மருந்தீஸ்வர பெருமான் ஆரம்பத்தில் கிழக்கு நோக்கிப் பார்த்தபடி இருந்தார் என்று சொல்லப்படுகிறது.

ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கு தரிசிக்க வந்த அப்பையதீக்ஷிதர் என்னும் பக்தரின் வேண்டுகோளுக்காக மனமிரங்கிய ஈசன், மேற்குப்புறமாகத் திரும்பினார் என்றும் கூறப்படுகிறது.

இன்று திருவான்மியூர் மார்க்கெட்டாக இருக்கும் பகுதி, அப்போது மங்கள ஏரியாக பெரும் வெள்ளத்தால் சூழப்பட்டு இருந்தபோது, இங்கு வந்த அப்பையதீக்ஷிதர் தரிசிக்க இயலாமல் போக, அவருக்காக மேற்கே திரும்பினாராம் ஈசன்.

வேதபுரீஸ்வரர், வான்மீகநாதர், ஆமுக்தீஸ்வரர், பால்வண்ண நாதர், தேனுமுக்தீஸ்வரர், திரிபுராந்தகர்,
சித்தநாதர் என வணங்கப்படும் ஈசர் இங்கு தியாகராஜ பெருமான் என்ற பெயரில் உற்சவராகவும் கொண்டாடப்படுகிறார்.

நக்கீரர் உள்ளிட்ட பல புலவர்களாலும் கொண்டாடப்பட்டவர் இந்தப் பெருமான்.

அதிகாலை கோபூஜையும், அர்த்தஜாம பால் அபிஷேகமும் இங்கு கண்டு வழிபடத்தக்க முக்கியமான பூஜைகள்.

இங்கு வழங்கப்படும் அபிஷேகப் பாலே சகல வியாதிகளுக்கும் மருந்தாக பக்தர்களால் ஏற்றுக் கொண்டு நோய்
ஒழியப்படுகிறது.

சொல்லச் சொல்ல நீளும் இந்த திருத்தலத்து ஈசனையும் இறைவியையும், காணும்போதே உள்ளிருக்கும் நோய் குணமாகிவிடும் வைத்திய இறைவர்கள்.

இதை எழுத்தால் மட்டும் உணர முடியாது. ஒருமுறை சென்று தரிசித்துப் பாருங்கள்.

அதன் பிறகு மருந்தீஸ்வரரே உங்கள் குடும்ப வைத்தியராக மாறிவிடும் அதிசயத்தை உணரப்பெறுவீர்கள்.

வந்த நோய்க்கு மட்டுமல்ல, நோயே வராமல் காப்பதிலும் இவரே அதிசய வைத்தியர்.

தேவாரம் பாடியவர்கள்:


திருநாவுக்கரசர் -ஐந்தாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம் மட்டும்.

திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறையில் ஒரு பதிகமும், மூன்றாம் திருமுறையில் ஒரு பதிகமும். ஆக மொத்தம் இத்தலத்திற்கு மொத்தம் மூன்று பதிகங்கள்.

இருப்பிடம்:

இந்தத் தலம் சென்னையின் தென் பகுதியில் திருவான்மியூரில் இருக்கிறது.

சென்னையின் மற்ற பகுதிகளில் இருந்து திருவான்மியூருக்கு பேருந்து வசதிகள் நிறைய இருக்கின்றன.

திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கி.மி. தொலைவில் ஆலயம் உள்ளது.

அஞ்சல் முகவரி:

நிர்வாக அதிகாரி.
அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில்,
திருவான்மியூர்,
சென்னை.
PIN - 600 041

இவ்வாலயம் இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

ஆலயப் பூஜை காலம்:

தினமும் காலை 5.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.


சம்பந்தர் தேவாரம்:

1. கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன்
றிரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர்
உரையு லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர்
வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே.

2. சந்து யர்ந்தெழு காரகில் தண்புனல்கொண்டுதம்
சிந்தை செய்தடி யார்பர வுந்திரு வான்மியூர்ச் 
சுந்த ரக்கழன் மேற்சிலம் பார்க்கவல் லீர்சொலீர்
அந்தி யின்னொளி யின்னிற மாக்கிய வண்ணமே.

 3. கான யங்கிய தண்கழி சூழ்கட லின்புறம்
தேன யங்கிய பைம்பொழில் சூழ்திரு வான்மியூர்த்
தோன யங்கம ராடையி னீரடி கேள்சொலீர்
ஆனையங் கவ்வுரி போர்த்தன லாட வுகந்ததே.

.4. மஞ்சு லாவிய மாடம திற்பொலி மாளிகைச் 
செஞ்சொ லாளர்கள் தாம்பயி லுந்திரு வான்மியூர்த்
துஞ்சு வஞ்சிரு ளாட லுகக்கவல் லீர்சொலீர்
வஞ்ச நஞ்சுண்டு வானவர்க் கின்னருள் வைத்ததே.

5. மண்ணி னிற்புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில்
திண்ணெ னப்புரி சைத்தொழி லார்திரு வான்மியூர்த்
துண்ணெ னத்திரி யுஞ்சரி தைத்தொழி லீர்சொலீர்
விண்ணி னிற்பிறை செஞ்சடை வைத்த வியப்பதே.

6. போது லாவிய தண்பொழில் சூழ்புரி சைப்புறம் 
தீதி லந்தண ரோத்தொழி யாத்திரு வான்மியூர்ச்
சூது லாவிய கொங்கையொர் பங்குடை யீர்சொலீர்
மூதெ யில்லொரு மூன்றெரி யூட்டிய மொய்ம்பதே.

7. வண்டி ரைத்த தடம்பொழி லின்னிழற் கானல்வாய்த்
தெண்டி ரைக்கட லோதமல் குந்திரு வான்மியூர்த்
தொண்டி ரைத்தெழுந் தேத்திய தொல்கழ லீர்சொலீர்
பண்டி ருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே.

8. தக்கில் வந்த தசக்கிரி வன்றலை பத்திறத்
திக்கில் வந்தல றவ்வடர்த் தீர்திரு வான்மியூர்த்
தொக்க மாதொடும் வீற்றிருந் தீரரு ளென்சொலீர்
பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே.

9. பொருது வார்கட லெண்டிசை யுந்தரு வாரியால்
திரித ரும்புகழ் செல்வமல் குந்திரு வான்மியூர்ச்
சுருதி யாரிரு வர்க்கு மறிவரி யீர்சொலீர்
எருது மேல்கொ டுழன்றுகந் தில்பலி யேற்றதே.

10. மைத ழைத்தெழு சோலையின் மாலைசேர் வண்டினம்
செய்த வத்தொழி லாரிசை சேர்திரு வான்மியூர்
மெய்த வப்பொடி பூசிய மேனியி னீர்சொலீர்
கைத வச்சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே.

11. மாதொர் கூறுடை நற்றவ னைத்திரு வான்மியூர்
ஆதி யெம்பெரு மானருள் செய்ய வினாவுரை
ஓதி யன்றெழு காழியுண் ஞானசம் பந்தன்சொல்
நீதி யானினை வார்நெடு வானுல காள்வரே.


        .

திருவிழாக்கள்:

பங்குனி மாதத்தில் நடைபெறும் பத்து நாட்கள் பிரமோற்சவம் பெருவிழா.
ஏழாம் நாள் தேர்த்திருவிழா.
ஒன்பதாவது நாள் வன்னிமர சேவை.
பத்தாம் நாள் வான்மீகி முனிவருக்காக இறைவன் ஆடிய திருநடனம்.
பதினோராம் நாள் தெப்ப உற்சவம்.

தொடர்புக்கு:

044- 24410477

நன்றி - கோவை - குப்புசாமி அவர்கள் 

                                 திருச்சிற்றம்பலம்

17.12.17

Sri Renganathar Perumal- Adhi Thiruvarangam

ஸ்ரீ ரெங்கநாதர் பெருமாள் - ஆதி திருவரங்கம் 




மூலவர் - ஸ்ரீ ரெங்கநாதர் 

தாயார் - ஸ்ரீ ரெங்கநாயகி 

தீர்த்தம் - சந்திர புஷ்காரணி 

தல விருச்சகம் - புண்ணாக மரம் 

தல பெருமை :



இக்கோயில் 3000 வருடங்கள் முற்பட்ட கோவிலாகும் . இங்கே விட்டிருக்கும் பெருமாள் பெருமாள் ஸ்ரீரங்கம் பெருமாளை விட பெரியவர் ஆவர் அதனால் இவரை பெரிய பெருமாள் என்று அழைக்கிறார்கள் . தமிழகத்தில் உள்ள பெருமாள்களில் பெரிய பெருமாள் ஆவர் .

தல வரலாறு :




இந்த சேஷ்திரத்தின் பெருமை ஸ்கந்தபுராண உத்தரகாண்டத்தில் உமாமகேஸ்வரஸம் வாதத்தில் 301 அத்தியாயம் முதல் 306 வது அத்தியாயம் வரை உதிரரங்க மஹாத்ம்யம் என்ற பெயரில் ஆறு அத்தியாயங்களில் வடமொழியில் கூறப்பட்டுள்ளது .

சோமுகன் என்ற அசுரன் தேவர்களை அழிப்பதற்காக வேதங்களை அபகரித்தான் .இதனால் தேவர்களும் ,முனிவர்களும் கவலை அடைந்து மகா விஷ்ணுவிடம் முறையிட்டனர் . மகா விஷ்ணு அவர்களின் கவலைகளை போக்க சமுத்திரத்தில் ஒளிந்திருந்த சோமுகனை அழித்து வேதங்களை மீட்டு இத்தலத்தில் பிரம்மனுக்கு உபதேசம் செய்தார் .

திருமங்கை அல்வா பெரிய திருமொழியில் 'வொருவதால் ' என தொடங்கும் பத்து பாசாரங்களும் 'ஏழை ஏதலன் ' என்று தொடங்கும் பத்து பாசுரங்களிலும் 
இத்தலத்தை மங்களாசனம் செய்துள்ளார் என இங்குள்ள கல்வெட்டுகளிலில் காணமுடிகிறது .

அமைவிடம் :

இக்கோவில் விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகில் மணலூர் பேட்டை அருகில் ஆதி திருவரங்கம் அமைந்துள்ளது .
இக்கோவில் காலை 6 மணி முதல் இரவு 7.30 வரை திறந்திருக்கும் .

22.11.17

Narasimhar Temple- Singarkudi / Singirikudi

அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் - சிங்கர்குடி  / சிங்கிரிக்குடி 

மூலவர் 

மூலவர் : நரசிம்மர் 

தாயார் : கனகவல்லி தாயார் 

தீர்த்தம் : ஜமத் கனி, இந்திரா ,பிறகு வாமன மற்றும் கருட தீர்த்தம் என                           ஐந்து வகை தீர்த்தம்  

விருச்சகம் : வில்வம் 

ராஜகோபுரம் 

தல பெருமை :

இத்தலம் 2000 வருடங்களுக்கு முற்பட்டது . இங்கு நரசிம்மர் 16 கைகளுடன் மேற்கு பார்த்து வீற்றியிருக்கிறார் . நரசிம்மர் தன்னுடைய பக்தன் பிரகலாதனுக்காக  மேற்கு திசையை நோக்கியவாறு இரணியனை வதம் செய்தார் அந்த பிரமாண்ட உருவத்துடன் 16 கைகளுடன் மிக உக்கிரமாக காட்சி அளிக்கிறார் . மற்றும் இடது புறத்தில் இரணியனின் மனைவி நீலாவதி வலது புறத்தில் தரிசனம் வேண்டி 3 அசுரர்கள் மற்றும் வடக்கு நோக்கி சிறிய வடிவில் யோக நரசிம்மர்,பால நரசிம்மர் வீற்றியிருக்கிறார்கள் .ஒரே இடத்தில 3 நரசிம்மர்கள் காட்சி கொடுப்பது மிக அரிது.

நரசிம்மர் தன் 16 கைகளில் பதாகஹஸ்தம் ,பிரயோக சக்ரம் ,குத்து கத்தி ,பானம் ,வில் ,சங்கு ,கதை ,கேடயம் ஆகியவற்றைகளையும் மற்ற கரங்களில் இரணியன் சம்ஹரமான குடலை கிழிப்பது ,மாலையாய் பிடித்திருத்தல் ,இரணியனின் தலையை அழுத்தி பிடித்தல் ஆகியவற்றுடன் காட்சி அளிக்கிறார் .
நுழைவாயில் 

தல சிறப்பு :

நரசிம்மர் உக்கிர கோலத்தில் லக்ஷ்மியை மடியில் வைத்தோ அல்லது யோக நிலையிலோ எல்லா கோவில்களிலும் காணலாம் ஆனால் இங்கு அவர் 16 கைகளுடன் இரணியனை வதம் செய்த கோலத்தில் உக்கிரமாக காட்சி கொடுக்கிறார் .
ஒரே தலத்தில் 3 நரசிம்ஹர் காட்சி கொடுக்கும் தலம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது அதற்கு அடுத்தாற்போல் தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளது .

பொது :

இத்தலத்தில் 5 நிலை கோபுரம் ,கனகவல்லி தாயார் ,ராமர் ,16ஆழ்வார்கள் ,விநாயகர் ,ஆஞ்சநேயர் ஆகியவர்கள் தனி தனி சன்னதியில் வீற்றியுள்ளார்கள் .

நரசிம்மரை வேண்டினாள் கடன் பிரச்சனை ,மனநலம் பாதித்தவர்கள் ,குழந்தை வரம் ,எதிரிகளால் வரும் தொல்லை ஆகியவற்றிகளுக்கு வேண்டி செவ்வாய் கிழமைகளில் மற்றும் ஸ்வாதி நட்சத்திரம் அன்று நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர் .

 செல்லும் வழி :

எல்லாரும் வாழ்வில் ஒரு முறையேனும் செல்ல வேண்டிய தலம் இது . ஒரே நாளில் சிங்கர்குடி ,பூவரசன் குப்பம் பூவரகன்  ,பரிக்கல் நரசிம்மர் தரிசிப்பது மிக சிறப்பு இவை அனைத்தும் ஒரே நேர்கோட்டில் மிக அருகிலேயே அமைந்துள்ளது .


சிங்கர்குடிக்கு பாண்டிச்சேரியிலிருந்து 10 km தூரம் கடலூர் செல்லும் வழியில் தவளக்குப்பம் என்ற இடத்தில இறங்கி ஆட்டோவில் இக்கோவிலுக்கு செல்லவேண்டும் .கடலூரில் இருந்தும் பாண்டிச்சேரி போகும் வழியில் இறங்கி செல்லலாம் .நிறைய பேருந்து வசதிகள் உள்ளது 

கோவில் திறந்திருக்கும் நேரம் :

காலை 7 முதல் 12 வரை , மாலை 4.30 முதல் 9.30 வரை 
இக்கோவில் கடலூர் மாவட்டத்தை உள்ளடங்கியது .

More details about this temple:



This is a Nrusimha Khsetra, situated about 3kms west of Abhishekapakkam road junction of Pondicherry--Cuddalore Road.

This holy place is at a distance of about 15 kms from Pondicherry.

This temple dedicated to Sri Nrusimha belong to Chola period,identified as AYIRRUR of ALWAR of Singavezhkundram(1051 A.D.)

There were stone inscriptions in the temple which describe the donations offered by Chola Kings , Sri Krishnadevaraya etc to Sri Nrusimha.

Sri Nrusimha is giving dharsan with 16 hands( thirukkarams )in a gigantic posture.
You could see Neelavathi, wife of Hiranyakasibu, threeASuras, Prahladha , Sukracharya, Vasishta in the lower east of the pedastal. 
Sri Devanathan , the presiding deity of Thiruvaheendrapuram is giving dharsan here as Sri Nrusimha. 

Sri Thirumangai Azhvar says that SRi Nrusimha is there at Thiruvaheendrapuram as Sri Devanatha.
Markandeya purana describes this holy Khsetra in Nrusimha vana purana. 
There is Brindavan for 4th Peedathipathi of Sri Ahobila Mutt here

Thanks To Mr. Saranathan Lakshminarasimhan for the above content 

19.11.17

Tiruvetteeswarar Temple- Chennai

அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோயில் -திருவட்டீஸ்வரன் பேட்டை -சென்னை 



மூலவர் - திருவேட்டீஸ்வரர் 

அம்பாள் - செண்பகவல்லி தாயார் 

தல விருச்சம் - செண்பக மரம் 

பழமை          - 1000 வருடங்கள் 

தீர்த்தம் -  செண்பக தீர்த்தம் 

தல சிறப்பு :



இலக்குமி அம்மையார் திருமாலை அடைய இங்கு இருந்து தவம் செய்தாள் .
திருமால் பார்த்தசாரதியாக வந்து இங்கு இருந்த இலக்குமி தாயை கைபிடித்ததால் பார்த்தசாரதிக்கு இது வேட்டகம் -மாமியார் வீடு ஆனதால் திருவேட்டக ஈஸ்வரன் பேட்டை என அழைக்கப்படுகிறது .


ராகு கேது பரிகார தலமாகவும் கருதப்படுகிறது 
இக்கோவிலின் தூணில் மகாலக்ஷ்மி கலசத்துடன் சிவலிங்கத்துக்கு பூஜை செய்யும் சிற்பம் உள்ளது . விநாயகருக்கு தனி சன்னதி எதிரே அமைந்து உள்ளது. இங்கு உள்ள சரஸ்வதிக்கு வீணை கிடையாது . சிவன் சுயம்புவாக காட்சி தருகிறார் .

அமைவிடம் :

திருவல்லிகேணி ஜாம் பஜார் உள் பக்கத்திலிருந்தும் ஸ்டார் தியேட்டர் எதிர் சந்திலிருந்தும்  இக்கோவிலுக்கு செல்லலாம் . இங்கிருந்து பார்த்த சாரதி கோவில் மிக மிக அருகிலேயே உள்ளது .

கோவில் திறக்கும் நேரம் :

காலை 6.00 மணி முதல் 11.00 வரையும் 
மாலை 5.00 முதல் 9.00 மணி வரை 

முகவரி :

அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோவில் 
திருவேட்டீஸ்வரன் பேட்டை , சென்னை -5
044-28418383


11.11.17

Vaidyanathar Temple- Vaitheeswaran Koil

வைத்தியநாதர் கோவில் -வைத்தீஸ்வரன் கோவில்

 








ஆதி வைத்தியநாதர் மற்றும் தல விருச்சம் 


மூலவர் - வைத்தியநாதர் 

தாயார் - தையல்நாயகி 

தலவிருச்சகம் - வேம்பு 

தீர்த்தம் - சித்தாமிர்தம் 

பழமை - 2000 வருடங்கள் முற்பட்டது 

மறுபெயர் - புள்ளிருக்குவேளூர் 

தேவார பாடல் பெற்ற காவேரி வடகரையில் இது 16வது தலம் .





தன்வந்திரி ஜீவ சமாதி 

தல சிறப்புக்கள் :



வைத்தியநாதர்  :

இவர் இங்கு சுயம்பு மூர்த்தியாக வீற்றியிருக்கிறார் . இக்கோவிலில் எல்லா நவகிரகங்களும் ஈசனின் பின்புறத்தில் ஒரே நேர்கோட்டில் உள்ளனர் .ஈசனுக்கு அடங்கி நவகிரகங்கள் உள்ளதால் ஈசனை வணங்குவர்களின் கிரக பலனை சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களில் இருந்து நிவர்த்தி செய்கிறார் .வைத்தியநாதர் மருந்தை தினமும் சாப்பிட்டுவந்தால் தீராத வியாதிகளும் தீரும் என்ற நம்பிக்கை உண்டு . இங்குள்ள மரகத லிங்கம் சிறப்பு வாய்ந்தது .

தையல்நாயகி :

தையல்நாயகிக்கு  புடவை சாத்துதல் ,அபிசேகம் மற்றும் சந்தனக்காப்பு  செய்வது பக்தர்களின் முக்கிய வேண்டுதலாக உள்ளது . மற்றும் தீராத வயிற்று வலி உள்ளவர்கள் தாயாருக்கு மாவிளக்கு ஏற்றி வேண்டிக்கொள்வார்கள் .இவரை வணங்கினால் குழந்தைகளுக்கு பாலா தோஷம் நீங்கும் .

செல்வமுத்துகுமார் :

இவருக்கு அர்த்தசாமபூஜை ரொம்ப விசேஷமானது .இரவு 9 மணிக்கு நடக்கும் பூஜையில் புனுகு ,பச்சை கற்பூரம் ,சந்தனம் ,எலுமிச்சை சாத்தி பன்னீர் புஷ்பம் ,பால் அன்னம் வைத்து பூஜை செய்வர் . இந்த சந்தனம் மற்றும் திருநீறு நோய் தீர்க்கவல்லது .இங்கு முத்துகுமாரரே முதன்மையாக உள்ளதால் காலை மற்றும் அர்த்தஜாம பூஜை முதலில் இவருக்கு செய்த பிறகே சிவனுக்கும் அம்மனுக்கும் பூஜை நடக்கும் . இங்கு எல்லா விழாக்களும் முருகனுக்கே நடக்கிறது .

அங்காரகன் (செவ்வாய் )

இங்கு அங்காரகனுக்கு தனி சன்னதி உள்ளது . செவ்வாய் தோஷத்தால் தடை பட்ட திருமண தோஷங்கள் ,கடன் மற்றும் மூட்டு வலி பிரச்சனைகள் ,நிலம் பிரச்சனைகள் ஆகியவை இவரை வணங்கினால் தீரும் . செவ்வாய் கிழமைகளில் இவர் ஆடு வாகனத்தில் எழுந்தருள்வார் . 

சித்தாமிர்த தீர்த்தம் :

இத்தல சிவனை சித்தர்கள் அமிர்தத்தால் அபிசேகம் செய்து பல வரங்களை பெற்றனர் அவ்வாறு செய்கையில் ஒரு துளி அமிர்தம் இக்குளத்தில் விழுந்ததால் இக்குளத்திற்கு சித்தாமிர்த குளம் என்று அழைக்கப்பட்டது .இக்குளத்தில் நீராடினால் உடலில் உள்ள அனைத்து நோய்களிலிருந்தும் விடுபடலாம் .இக்குளத்தில் 18 தீர்த்தங்கள் உள்ளதாக கூறப்படுகிறது .சதானந்த முனிவரின் சாபத்தால் இக்குளத்தில் தவளை மற்றும் பாம்புகள் இருப்பதில்லை .

திருச்சாந்து :

இங்கு புற்று மண் ,அபிசேக தீர்த்தம் ,வேப்ப இலை ,அபிசேக சந்தனம் ,அபிசேக திருநீறு இவைகளை கொண்டு திருச்சாந்து உருண்டை தயார் செய்யப்படுகிறது .இதை வாங்கி சாப்பிட்டால் தீராத வியாதிகளும் தீரும் என்ற நம்பிக்கை உண்டு .தோல் வியாதிகளுக்கு இங்கே கொடுக்கப்படும் புனுகு எண்ணையை தேய்த்து நீராடினால் குணமாகும் . இக்கோயில் 4448 நோய்களை தீர்த்துவைக்கும் தலைமை பீடம் இது .தன்வந்தரி சித்தரின் ஜீவ சமாதி அடைந்த இடமும்கூட .

சடாயுகுண்டம் :


சடாயுகுண்டம் 



சடாயுவின் வேண்டுதலின் படி ராமபிரான் விபூதி குண்டலத்தில் சிதையடுக்கி சடாயுவின் உடலை இட்டு தகனம் செய்ததால் இவ்விடம் சடாயுகுண்டம் என்று அழைக்கப்படுகிறது .

இத்தல பெருமைகளை இன்னும் அடுக்கி கொண்டே போகலாம் அவ்வளவு சிறப்பு வாய்ந்த தலம் இது .

மற்றும்  பல மாநிலத்தவரின் குலதெய்வம் என்பதால் தினமும் இங்கே மொட்டை அடித்தல் ,காது குத்துதல் மற்றும் திருமணங்கள் நடை பெறுகின்றனர் .இத்தலத்தில் ஓலை சுவடி ஜோசியம் ரொம்ப பிரபலமானது .

இத்திருக்கோயில் திருக்கைலாய தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமானது .

செல்லும் வழி :

இது நாகப்பட்டினம் மாவட்டதில் மயிலாடுதுறை அருகில் உள்ளது .சிதம்பரம் நடராசரை தரிசனம் செய்துவிட்டு வைத்தியநாதரை தரிசனம் செய்யலாம்.
நிறைய தங்கும் விடுதிகள் இங்கே உண்டு . மொட்டை அடித்தால் சுடு நீர் அருகிலேயே குறைந்த பணத்திற்கு தருகிறார்கள் . சாப்பிட ஒரு ஐயர் மெஸ் மற்றும் பேருந்து நிலையத்திற்கு அருகில் மிக உயர் தரமான சைவ ஹோட்டலுடன் கூடிய அழகிய தங்கும் விடுதி "சதாபிஷேகம் " என்ற பெயரில் உள்ளது .  விடுதியின் விவரம் பின் வரும் லிங்கை அழுத்தவும் .


திறந்திருக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் 11 வரை , மாலை 4 மணி முதல் இரவு  8.30 வரை 

If you need to English please click following link





4.11.17

yoga Narasimhar Temple- Velachery

யோக நரசிம்மர் ஆலயம் - வேளச்சேரி 

vazipokkan



மூலவர் : ஸ்ரீ  யோக நரசிம்மர் 
தாயார் :ஸ்ரீ அமிர்தபாலவல்லி 

இந்த கோவில் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக நம்பப்படுகின்றது . இத்தலம் சோழர் காலத்துக்கு உட்பட்டதாக கருதப்படுகிறது . இத்தலம் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது . அண்மையில் தான் இந்த ஆலயம் மிக அழகாக பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷகம் நடத்தப்பட்டது .

vazipokkan



கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் மற்றும் மேற்கிலும் ஒரு நுழைவாயில் உள்ளது .அமிர்தபாலவல்லி தாயார் வலது புறத்தில் தனி சன்னதி உள்ளது அவர் கிழக்கை நோக்கி உள்ளார் . நுழைவாயிலின் இடது புறத்தில் சக்கரத்து ஆழ்வார் ,கோதண்டராமர் மற்றும் ஆஞ்சனேயர் ஆகியவர்கள் தனித்தனி சன்னதியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர் .

மூலவர் யோக நரசிம்மர் மிக அழகாக கம்பிரமான தோற்றத்துடன் நான்கு கரத்துடன் யோக நிலையில் அருள் செய்கிறார் . அவரை நாம் பார்க்கும்போதே நம் மனதில் ஒரு விதமான பரவச நிலையை அடைவதை உணரலாம் .

இந்த கோவில் அமைப்பு மற்றும் சுற்று புறத்தில் உள்ள கலை நயமிக்க பாலகர்கள் மற்றும் நரசிம்மருடைய சிலைகளை காண்பதற்கு நாம் கோடி கண்கள் வேண்டும் .

கோவில் செல்லும் வழி
விஜய நகர் பேருந்து நிலையத்தில் இருந்து குருநானக்  கல்லூரி மற்றும் தண்டீஸ்வரர் கோவில் செல்லும் வழியில் உள்ளது .

திறந்திருக்கும் நேரம் :

காலை 7.00-10.30 மற்றும் மாலை 5.00 - 10.30

If you want to read in English please click this link

vazipokkan

vazipokkan

25.10.17

Kolanji Appar Temple(Murugan Temple)- Manavalanallur-Vriddhachalam

கொளஞ்சி அப்பர் கோவில் (முருகன் )---
விருத்தாச்சலம் 

அருள்மிகு கொளஞ்சியப்பர் சந்தன அலங்காரத்துடன் 


தல பெருமை :

நடு நாட்டு திருத்தலங்களில் ஒன்றான 'திருமுதுகுன்றம் 'என்னும் விருதாச்சலத்திற்கு அருகில் கடும் பூவும் நிறைந்த புள்ளினங்கள் ,வண்டினங்களும் இசைபாடும் இதைமணம் நிறைந்த மணவாளநல்லூர் என்னும் சிற்றூர் உள்ளது .'குரங்கு உலாவும் குன்றுறை மணவாள 'என்று அருணகிரிநாதர் அருளியதால் கந்தன் எழுந்தருளிய காரணத்தால் மணவாளநல்லூர் என்று அழைக்க படுகிறது .

இன்றைய கந்தசஷ்டி கடைசி நாளான சூரசம்ஹார நாளன்று இந்த கந்தனை பற்றி எழுத எனக்குள் உந்துதலை என் கருணை வடிவான கந்தன் ஏற்படுத்தியதை நான் என்னவென்று சொல்லுவேன் .

சுயம்புவாக கொளஞ்சியப்பன் :

தந்தையை போல் தானும் அருவுருவமாய் காட்சி தரும் தலம் மணவாளநல்லூர் .ஒரு காலத்தில் கொளஞ்சி மரங்கள் அதிகமாக இருந்த பகுதி ,ஒரு சமயம் சில சிறுவர்கள் பசுக்களை மேய்ச்சலுக்காக ஓட்டி வந்தபோது ஒரு பசு மட்டும் தினமும் ஒரு புதருக்குள் ஆடாமல் அசையாமல் நிற்பதை கவனித்த சிறுவர்கள் அந்த இடத்தை சென்று பார்க்கும்போது பசு அங்கு இருந்த ஒரு கருங்கல் பீடத்துக்கு தானாகவே பால் சொரிவதை கவனித்தனர் . உடனே அவர்கள் ஊர் பெரியவர்களிடம் தெரிவிக்க அவர்கள் அந்த சுயம்புவாக தோன்றிய இடத்தில் கோவில் எழுப்பி வழிபட தொடங்கினர் .கொளஞ்சி வனத்தில் தோன்றியதால் 'கொளஞ்சியப்பர் 'என்ற திருப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டார் .


திருத்தல வரலாறு 

சுவாமி உருவமின்றி உள்ளதால் என்ன தெய்வம் என்பது குறித்து ஆராய்ந்தபோது ,விருத்தாச்சலம் திருத்தல வரலாற்றில் 'தம்பிரான் தோழன் 'என்று சொல்லக்கூடிய சுந்தரமுர்த்தி நாயனார் தில்லை இருந்து பதிகம் பாடி 
விருத்தாச்சலம் அடையும் போது ஊர் மற்றும் சுவாமி பெயர்களை கேள்வியுற்று முதுமை தன்மை வாய்ந்த இவர்களால் போன் ,பொருள் கிடைக்காது என கருதி பாடாமல் சென்ற போது திருமுதுகுன்ற ஈசனாகிய பரம்பொருள் அவரிடம் விளையாட எண்ணி தனது மைந்தன் முருகனிடம் 
'சுந்தரர் மதியாது செல்வதால் அவரை எமதிடத்திற்கு வருவிக்க செய் ' என ஈசன் பிராது கொடுத்த இடம் மணவாளநல்லூர் என்று தெரிய வந்தது .அதன்படி விருத்தாச்சலம் நகருக்கு மேற்கு திசையில் முருகன் தான் பலிபீட உருவில் அமைந்துள்ளார் என உறுதி செய்யப்பட்டது .

திருத்தல பெருமை மற்றும் பிராது கட்டுதல் :

பிராது கட்டும் இடம் 


இத்திருத்தலத்தில் முருகர் நீதிபதியாகவும் வைத்தியராகவும் அருள்புரிகிறார் .அதன்படி பக்தர்கள் தங்களுடைய கஷ்டங்களையும் ,நியாயமான கோரிக்கைகளையும் எழுத்து மூலமாக சுவாமிக்கு பிராது செலுத்தி செலுத்திய நாளிலிருந்து 90 நாட்களுக்குள் முழுவதுமாக நிவர்த்தி பெறுவதும் ,கோரிக்கை நிறைவேறியவர்கள் பிராத்தனை திரும்ப பெற்றுக்கொள்வதும் அன்றாடம் நடந்து வருகிறது .

பிணி தீர்க்கும் வேப்பஎண்ணெய் :

கை கால் வலி உள்ளவர்கள் ,தீராத நோய் உள்ளவர்கள் இத்திருத்தலத்தில் ஒரு மண்டலம் ,அரை மண்டலம் என தங்கி கொளஞ்சியப்பரை தரிசித்து அவரது சன்னதியில் பூஜித்து வழங்கும் வேப்பஎண்ணெயினை உடம்பில் பூசியும் ,அருந்தியும் குணமடைந்து வருகின்றனர் .

சித்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்கள் :



முருகருக்கு அருகிலேயே சித்தி விநாயகருக்கும் தனிவிமானதுடன் கூடிய கருவறை உண்டு இவர் பெரிய திருமேனியுடன் காட்சி அளிப்பார் .இவருக்கு நேர் எதிரே இரண்டு பெரிய கம்பிரமான குதிரை உள்ளது .மற்றும் முனியப்பர் ,வீரனார் ,இடும்பன் ஆகியோர் சன்னதி கொண்டு இருக்கின்றனர் .முனியப்பர் நேரே நிறைய வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .

அமைவிடம் :

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகில் உள்ளது . விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் நல்லூர் செல்லும் பேருந்துகளில் சென்றால் 10 நிமிடங்களில் சென்றுவிடலாம் .

If you need further details in English please click following link

16.10.17

Palamalainathar (Viruthagirishwarar) Temple, Viruthachalam

அருள்மிகு பழமலைநாதர்(விருத்தகரீஸ்வர் )ஆலயம் விருத்தாச்சலம்

முழு தோற்றம் 

 சுவாமி : விருத்தகிரீஸ்வரர்
தாயார் : விருத்தாம்பிகை , பாலாம்பிகை 
விருச்சம் : வன்னி மரம் 
தீர்த்தம் : மணிமுத்தாநதி 
புராண பெயர் : திருமுதுகுன்றம் 


சிறப்புக்கள் :






நோய் தீர்க்கும் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டு திருத்தலங்களில் இது 9 வது தலம் .

விருத்தம் என்றால் முதுமை, அசலம் என்றால் மலை. இதனால் பழமலை என்ற பெயரும் இந்த ஊருக்கு உண்டு. 1008 சிவத்தலங்களில் முக்கிய 4 தலங்களில் ஒன்றாக விருத்தாசலம் விளங்குகிறது. காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி என்ற பழமொழியும் இக்கோயிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. சிவபெருமான் முதன் முதலில் இங்கு மலைவடிவில் தோன்றி காட்சியளித்தார். பின்பு தான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் உருவாகியது என்றும் திருவண்ணாமலைக்கு முன்பே உருவானதால் அதன் காரணமாக விருத்தாசலத்திற்கு பழமலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. மலையாக இருந்து பின் குன்றாக மாறி அதன் பின்னர்தான் திருத்தலமாக மாறியது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  

வன்னி மரம் 



இறைவனை தரிசனம் கண்ட ஐந்து முனிவர்கள், ஐந்து பிரகாரம், ஐந்து கோபுரம், ஐந்து கொடிமரம், ஐந்து உள்மண்டபம், ஐந்து வெளிமண்டபம், ஐந்து வழிபாடு, ஐந்து தேர், விருத்தகாசி, திருமுதுகுன்றம், விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி என ஐந்து பெயர்கள் உள்ளன. இவ்வாறு எல்லாமே ஐந்து என்ற சிறப்பை பெற்றுள்ளது. இத்தலத்தில் உள்ள துர்க்கையம்மனை வழிபட்டால் கல்யாணவரம் கை கூடும், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும். கோயில் அருகிலுள்ள மணிமுக்தா நதியில் நீராடினால் முக்தி கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. விருத்தகிரீஸ்வரரை வழிபட்டால் மனநிம்மதி கிடைக்கும். உடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இக்கோயிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் கிரிவலம் நடைபெறுகிறது. தல விருட்சமான வன்னிமரம் 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 

விழா காலங்கள் 


இத்தலத்தில் பிறப்பு, வாழ்வது, வழிபடுவது, நினைப்பது, இறப்பது என ஐந்தில் ஒன்று நடந்தாலே முக்தி நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம். சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவியப்பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. சுவாமிக்கு சங்காபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவைகள் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு மஞ்சள்பொடி மற்றும் புடவைசாத்துதல் ஆகியவைகளும் செய்யபட்டு வருகிறது.


ஆழத்து பிள்ளையார்



ஆழத்து பிள்ளையார் 


 ராஜகோபுரத்தை அடுத்து இடது பக்கம் உள்ள ஆழத்து விநாயகர் சன்னதி விநாயகரின் இரண்டாவது படைவீடாகும். காளஹஸ்தி கோயிலில் உள்ளது போல் 18 படியிறங்கி சென்று தரிசிக்கும் வகையில் விநாயகர் அமர்ந்துள்ளார். ஒருமுறை உலகம் அழிந்தபோது இத்தலம் மட்டும் அழியாமல் இருந்ததாக புராணம் கூறுகிறது.முருகப்பெருமானின் தலையில் சக்கரம் அமைந்துள்ளது. இவரை வணங்கினால் எல்லா வளமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது






ஒருமுறை சுந்தரர் திருவாரூரில் நடக்கும் பங்குனி உத்திரவிழாவில் அடியார்களுக்கு அன்னதானம் செய்வதற்காக ஒவ்வொரு ஸ்தலமாக பொருள் சேகரித்து கொண்டு வந்தார். இத்தலத்துக்கு வந்தபோது இறைவன், சுந்தரருக்கு 12 ஆயிரம் பொன்னை தந்தார். அந்த பொன்னை எடுத்துச்சென்றால் வழியில் கள்வர்கள் பறித்துக்கொள்வார்களோ என பயந்துபோன சுந்தரர் இங்குள்ள மணிமுக்தாற்றில் பொற்காசுகளைப் போட்டு திருவாரூரில் உள்ள குளத்தில் எடுத்தாராம். இதுவே ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது என்ற பழமொழி உருவாகக் காரணமானது.

அமைவிடம் 

இந்த  திருத்தலம் கடலூர் மாவட்டதில் அமைந்துதள்ளது . பாண்டி ,திருச்சி ,சென்னை ,சேலம் ஆகிய இடங்களில் இருந்து ட்ரெயின் மற்றும் பேருந்து வசதிகள் உள்ளது .
இங்கிருந்து சிதம்பரம் தில்லை நாதன் , ஸ்ரீமுஷ்ணம் பூவராகர் , கொளஞ்சியப்பர் முருகன் மிக அருகில் உள்ளது .

If you need details in English Please Click following Link

17.9.17

Ashtalingams Near Chennai

சென்னை சுற்றி உள்ள அஷ்டலிங்கங்கள் 

அஷ்டலிங்கத்தின் விளக்கம் :

நாம் பெரும்பாலும் அஷ்டலிங்கங்களை திருவண்னாமலை அருணாச்சலேஸ்வரை சுற்றி கிரி வளம் வரும் போது கண்டிருப்போம் .ஆனால் நம் சென்னை அருகில் திருவேற்காடு சுற்றி அஷ்டலிங்கங்களை கண்டிருக்கமாட்டோம் .இங்கு உள்ள அனைத்து லிங்கங்களும் 2000 வருடங்களுக்கு முற்பட்டது ,இவை அனைத்தையும் அகத்தியர் மாமுனிவர் நிறுவினார் . இவை அனைத்தையும் அபிநய சோழன் என்பவரால் கட்டிமுடிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது .

அஷ்டலிங்கங்களும் அதன் பெருமைகளும்  :

அஷ்டலிங்கங்களை ஒரே நாளில் கண்டு ரசித்தால் கர்மவினை அகலும் என்று சொல்வார்கள் .ஒவ்வரு ராசிகளுக்கும் ஒரு லிங்கம் உண்டு அந்த ராசிக்காரர்கள் அவருக்குரிய லிங்கங்களை வணங்கினால் அதற்குரிய நன்மைகளை பெறலாம் .

1. இந்திரலிங்கம் - ரிஷபம் ,துலாம் 
2. அக்னி லிங்கம் - சிம்மம் 
3. எமலிங்கம்       - விருச்சகம் 
4. நிருதிலிங்கம்  - மேஷம் 
5. வருணலிங்கம் -மகரம் ,கும்பம் 
6. வாயுலிங்கம்    -கடகம் 
7. குபேரலிங்கம்  -தனுசு ,மீனம் 
8. ஈசான்யலிங்கம் - மிதுனம் ,கன்னி 

சென்னையை சுற்றி உள்ள அஷ்டலிங்கங்களின் இடங்கள் :

1. இந்திரலிங்கம் -வள்ளிகொல்லைமேடு (கிழக்கு )

இது  அஷ்டலிங்கங்களின் முதல் லிங்கம் ஆகும் .இங்கே ஞானாம்பிகை சமேத இந்திரலிங்கம் உள்ளார் .திருவேற்காடு பேருந்து நிலையம் போகும் வழியில் பெட்ரோல் பங்க் எதிர் புறம் பிரதான சாலையிலேயே அமைந்து உள்ளது .இவரை வணங்கினால் வேலையில் முன்னற்றம் ,அரசு தொடர்பான காரியங்களை தங்கு தடையின்றி பெறலாம் .

vazipokkan
இந்திரலிங்கம் 


2. அக்னிலிங்கம் - நூம்பல் (தென் கிழக்கு ) 


அகத்தியர் இமயமலையிலிருந்து நூம்பல் என்ற பூவை எடுத்து வந்து இங்கே இவரை நிறுவி வணங்கியதால் இந்த ஊருக்கு நூம்பல் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது . வேலப்பன்சாவடியிலேருந்து கஜலக்ஷ்மி மண்டபத்தின் அருகில் உள்ள சாலையில் நடந்து செல்லும் தொலைவில் உள்ளது . இவரை வணங்கினால் எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடலாம் .


3. எமலிங்கம் - சென்னீர்குப்பம் (தெற்கு )

மரகதாம்பிகை சமேத கைலாசநாதர் இங்கே  அமைந்துள்ளார் . குடியிருப்புகள் அதிகமாக அமைந்துள்ள இடத்தில் வீற்றியுள்ளார் . பூந்தமல்லி ஆவடி மெயின் ரோட்டில் பைபாஸ் சந்திக்கும் இடத்துக்கு முன்னதாக இந்த கோவில அமைந்துள்ளது .இவரை வணங்கினால் எம பயம் நீங்கும் மற்றும் ஏழரை சனி ,கண்ட சனி இவைகளிருந்து விடுபடலாம் .

எமலிங்கம் - கைலாசநாதர் 

4. நிருதிலிங்கம் - பாரிவாக்கம் (தென் மேற்கு )

பாலாம்பிகை சமேத பாலீஸ்வரர் அமைந்த இடம் . பூந்தமல்லி பைபாஸ் நடுவில் ஒரு சிக்னல் வரும் அதற்கு இடப்புறம் பட்டாபிராம் போகும் வழியில் பரிவாக்கம் வரும் இடது புறத்தில் கோவிலின் வளைவு வரும் . இவரை வணங்கினால் கடன் தொல்லைகள் ,வார கடன் இவைகளில் இருந்து விடுபடலாம் .இந்த கோவில் குருக்கள் வரும் நேரத்தில் மட்டுமே திறந்து இருக்கும் .


நிருத்தலிங்கம் -பாலீஸ்வரர் 

5. வருணலிங்கம் - மேட்டுப்பாளையம் (மேற்கு )

பாலிவாக்கம் கோவிலில் இருந்து திரும்பி வரும் வழியில் அம்பேத்கார் சிலைக்கு அடுத்து வரும் ரோட்டில் திரும்பினாள் ஏரி கரையை கடந்தால் இயற்கையான இடத்தில மிக சிறியதான டென்ட் கொட்டகை உள் மிக ரம்யமாக ஜலகெண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வர் வீற்றியிருக்கிறரர் . அவரை வணங்கினால் நோய்களிலிருந்து விடுபடலாம் மற்றும் குழந்தைகள் நலமுடன் பிறக்கும் . இந்த கோவிலை புதுப்பிக்கும் மற்றும் கோபுரம் அமைக்கும் பணி வரும் கார்த்திகை மாதத்தில் தொடங்க இருக்கிறார்கள் உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம் .
ஜலகண்டேஸ்வரர் 
ஜலகண்டேஸ்வரரி 
கோவில் தோற்றம்

6. வாயுலிங்கம்  - பருத்திப்பட்டு (வட மேற்கு )


மேட்டுப்பாளையத்தில் இருந்து 3கி .மீ சென்றால் பருத்திப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் ஹனுமான் கோவில் அருகில் உள்ளே சென்றால் இந்த அழகிய கோவில் வரும் . இந்த விருத்தாம்பிகை சமேத வாயுலிங்கேஸ்வரரை வணங்கினால் வாயு தொல்லை மற்றும் இழந்த சொத்துக்களையும் மீட்டு எடுக்கலாம்.


7. குபேரலிங்கம் - சுந்தரசோழபுரம் (வடக்கு )


பருத்திப்பட்டு இருந்து இடது புறத்தில் சென்றால் சுந்தரசோழபுரம் வரும் . வேம்புநாயகி சமேத குபேரலிங்கேஸ்வர் இவரை வணங்கினால் வாழ்வில் எல்லா வித பொருளாதார மற்றும் வெற்றிகளை பெறலாம் .



8. ஈசானலிங்கம் - சின்னகோலடி (வட கிழக்கு )


இந்தக்கோயில் கண்டுபிடிப்பது சற்று சிரமம் . இன்னும் வளர்ச்சி அடையாமல் உள்ளது. ஞானேஸ்வரி சமேத ஈசான்யலிங்கம் இவரை வணங்கினால் வாழ்வில் வெற்றிகளையும் மற்றும் தடைகள் மற்றும் தோல்விகளில் இருந்து விடுபடலாம் .

நாம் இந்த கோவில்களுக்கு செல்லும் போது சில கோவில்கள் குருக்கள் இல்லாமல் அல்லது ஒரு வேலை மட்டும் பூஜை செய்யப்படுகிறது .
பௌர்ணமி , சிவராத்திரி ,திங்கள் கிழமை இந்த நாட்களில் நல்ல கூட்டமும் பூஜைகளும் நடைபெறுகின்றன . சிலர் இந்த நாட்களில் குழுவாக எல்லா கோவில்களுக்கும் ஒரே நாளில் செல்கின்றனர் . நீங்களும் இந்த அஷ்டலிங்கங்களை தரிசனம் செய்தால் ஒரு வித்தியாசமான அனுபவத்தையும் ஈசனின் அருளையும் பெறுவது நிச்சயம் .


வழிகாட்டி 


Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...