17.9.17

Ashtalingams Near Chennai

சென்னை சுற்றி உள்ள அஷ்டலிங்கங்கள் 

அஷ்டலிங்கத்தின் விளக்கம் :

நாம் பெரும்பாலும் அஷ்டலிங்கங்களை திருவண்னாமலை அருணாச்சலேஸ்வரை சுற்றி கிரி வளம் வரும் போது கண்டிருப்போம் .ஆனால் நம் சென்னை அருகில் திருவேற்காடு சுற்றி அஷ்டலிங்கங்களை கண்டிருக்கமாட்டோம் .இங்கு உள்ள அனைத்து லிங்கங்களும் 2000 வருடங்களுக்கு முற்பட்டது ,இவை அனைத்தையும் அகத்தியர் மாமுனிவர் நிறுவினார் . இவை அனைத்தையும் அபிநய சோழன் என்பவரால் கட்டிமுடிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது .

அஷ்டலிங்கங்களும் அதன் பெருமைகளும்  :

அஷ்டலிங்கங்களை ஒரே நாளில் கண்டு ரசித்தால் கர்மவினை அகலும் என்று சொல்வார்கள் .ஒவ்வரு ராசிகளுக்கும் ஒரு லிங்கம் உண்டு அந்த ராசிக்காரர்கள் அவருக்குரிய லிங்கங்களை வணங்கினால் அதற்குரிய நன்மைகளை பெறலாம் .

1. இந்திரலிங்கம் - ரிஷபம் ,துலாம் 
2. அக்னி லிங்கம் - சிம்மம் 
3. எமலிங்கம்       - விருச்சகம் 
4. நிருதிலிங்கம்  - மேஷம் 
5. வருணலிங்கம் -மகரம் ,கும்பம் 
6. வாயுலிங்கம்    -கடகம் 
7. குபேரலிங்கம்  -தனுசு ,மீனம் 
8. ஈசான்யலிங்கம் - மிதுனம் ,கன்னி 

சென்னையை சுற்றி உள்ள அஷ்டலிங்கங்களின் இடங்கள் :

1. இந்திரலிங்கம் -வள்ளிகொல்லைமேடு (கிழக்கு )

இது  அஷ்டலிங்கங்களின் முதல் லிங்கம் ஆகும் .இங்கே ஞானாம்பிகை சமேத இந்திரலிங்கம் உள்ளார் .திருவேற்காடு பேருந்து நிலையம் போகும் வழியில் பெட்ரோல் பங்க் எதிர் புறம் பிரதான சாலையிலேயே அமைந்து உள்ளது .இவரை வணங்கினால் வேலையில் முன்னற்றம் ,அரசு தொடர்பான காரியங்களை தங்கு தடையின்றி பெறலாம் .

vazipokkan
இந்திரலிங்கம் 


2. அக்னிலிங்கம் - நூம்பல் (தென் கிழக்கு ) 


அகத்தியர் இமயமலையிலிருந்து நூம்பல் என்ற பூவை எடுத்து வந்து இங்கே இவரை நிறுவி வணங்கியதால் இந்த ஊருக்கு நூம்பல் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது . வேலப்பன்சாவடியிலேருந்து கஜலக்ஷ்மி மண்டபத்தின் அருகில் உள்ள சாலையில் நடந்து செல்லும் தொலைவில் உள்ளது . இவரை வணங்கினால் எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடலாம் .


3. எமலிங்கம் - சென்னீர்குப்பம் (தெற்கு )

மரகதாம்பிகை சமேத கைலாசநாதர் இங்கே  அமைந்துள்ளார் . குடியிருப்புகள் அதிகமாக அமைந்துள்ள இடத்தில் வீற்றியுள்ளார் . பூந்தமல்லி ஆவடி மெயின் ரோட்டில் பைபாஸ் சந்திக்கும் இடத்துக்கு முன்னதாக இந்த கோவில அமைந்துள்ளது .இவரை வணங்கினால் எம பயம் நீங்கும் மற்றும் ஏழரை சனி ,கண்ட சனி இவைகளிருந்து விடுபடலாம் .

எமலிங்கம் - கைலாசநாதர் 

4. நிருதிலிங்கம் - பாரிவாக்கம் (தென் மேற்கு )

பாலாம்பிகை சமேத பாலீஸ்வரர் அமைந்த இடம் . பூந்தமல்லி பைபாஸ் நடுவில் ஒரு சிக்னல் வரும் அதற்கு இடப்புறம் பட்டாபிராம் போகும் வழியில் பரிவாக்கம் வரும் இடது புறத்தில் கோவிலின் வளைவு வரும் . இவரை வணங்கினால் கடன் தொல்லைகள் ,வார கடன் இவைகளில் இருந்து விடுபடலாம் .இந்த கோவில் குருக்கள் வரும் நேரத்தில் மட்டுமே திறந்து இருக்கும் .


நிருத்தலிங்கம் -பாலீஸ்வரர் 

5. வருணலிங்கம் - மேட்டுப்பாளையம் (மேற்கு )

பாலிவாக்கம் கோவிலில் இருந்து திரும்பி வரும் வழியில் அம்பேத்கார் சிலைக்கு அடுத்து வரும் ரோட்டில் திரும்பினாள் ஏரி கரையை கடந்தால் இயற்கையான இடத்தில மிக சிறியதான டென்ட் கொட்டகை உள் மிக ரம்யமாக ஜலகெண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வர் வீற்றியிருக்கிறரர் . அவரை வணங்கினால் நோய்களிலிருந்து விடுபடலாம் மற்றும் குழந்தைகள் நலமுடன் பிறக்கும் . இந்த கோவிலை புதுப்பிக்கும் மற்றும் கோபுரம் அமைக்கும் பணி வரும் கார்த்திகை மாதத்தில் தொடங்க இருக்கிறார்கள் உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம் .
ஜலகண்டேஸ்வரர் 
ஜலகண்டேஸ்வரரி 
கோவில் தோற்றம்

6. வாயுலிங்கம்  - பருத்திப்பட்டு (வட மேற்கு )


மேட்டுப்பாளையத்தில் இருந்து 3கி .மீ சென்றால் பருத்திப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் ஹனுமான் கோவில் அருகில் உள்ளே சென்றால் இந்த அழகிய கோவில் வரும் . இந்த விருத்தாம்பிகை சமேத வாயுலிங்கேஸ்வரரை வணங்கினால் வாயு தொல்லை மற்றும் இழந்த சொத்துக்களையும் மீட்டு எடுக்கலாம்.


7. குபேரலிங்கம் - சுந்தரசோழபுரம் (வடக்கு )


பருத்திப்பட்டு இருந்து இடது புறத்தில் சென்றால் சுந்தரசோழபுரம் வரும் . வேம்புநாயகி சமேத குபேரலிங்கேஸ்வர் இவரை வணங்கினால் வாழ்வில் எல்லா வித பொருளாதார மற்றும் வெற்றிகளை பெறலாம் .



8. ஈசானலிங்கம் - சின்னகோலடி (வட கிழக்கு )


இந்தக்கோயில் கண்டுபிடிப்பது சற்று சிரமம் . இன்னும் வளர்ச்சி அடையாமல் உள்ளது. ஞானேஸ்வரி சமேத ஈசான்யலிங்கம் இவரை வணங்கினால் வாழ்வில் வெற்றிகளையும் மற்றும் தடைகள் மற்றும் தோல்விகளில் இருந்து விடுபடலாம் .

நாம் இந்த கோவில்களுக்கு செல்லும் போது சில கோவில்கள் குருக்கள் இல்லாமல் அல்லது ஒரு வேலை மட்டும் பூஜை செய்யப்படுகிறது .
பௌர்ணமி , சிவராத்திரி ,திங்கள் கிழமை இந்த நாட்களில் நல்ல கூட்டமும் பூஜைகளும் நடைபெறுகின்றன . சிலர் இந்த நாட்களில் குழுவாக எல்லா கோவில்களுக்கும் ஒரே நாளில் செல்கின்றனர் . நீங்களும் இந்த அஷ்டலிங்கங்களை தரிசனம் செய்தால் ஒரு வித்தியாசமான அனுபவத்தையும் ஈசனின் அருளையும் பெறுவது நிச்சயம் .


வழிகாட்டி 


No comments:

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...