8.3.18

Arulmigu Vaikundavasa perumal temple, koyembedu

அருள்மிகு வைகுண்டவாச பெருமாள் திருக்கோயில் 

முகப்பு தோற்றம் 




மூலவர் - வைகுண்டவாசர் 

உற்சவர் :  பக்தவச்சலர் 

தாயார் - கனகவல்லி தாயார் 

விருச்சகம் - வில்வம் , வேம்பு 

தீர்த்தம் -  லவசதீர்த்தம் 

புராண பெயர் : குசலவபுரி 





தல சிறப்பு :

*  வைகுண்ட பெருமாள் பெரும்பாலும் அமர்ந்த நிலையில் காட்சி தருவார் ஆனால் இங்கு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார் .

* வால்மீகி மற்றும் லவன் குசன் இங்கு காட்சிஅளிக்கின்றனர் 

* இங்கு சீதை கற்பவதியாக அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் 

* இங்கு வால்மீகி வசித்ததற்கான அடையாளமாக புற்று ஒன்று உள்ளே இருக்கிறது 

* அனுமன்,லக்ஷ்மணன்  இல்லாத ராமர் மற்றும் சீதா காட்சியளிக்கிறார் ஏனென்றால் சீதாவை காண ராமர் அரச கோலத்தில் வராமல் மரவுரி தரித்த கோலத்தில் காட்சிதருகிறார் .இக்கோலத்தில் காண்பது மிக அபூர்வம் . இக்கோவிலின் வெளியே லவசதீர்த்ததில் பிற்காலத்தில் ஆஞ்சநேயருக்கு கோயில் எழுப்பப்பட்டது .

* கோவில் வளாகத்தில் இரண்டு வில்வ மரங்கள் ஒரு வேம்பு மரம் பிணைந்து காணப்படுகிறது இதை சிவா விஷ்ணு மற்றும் அம்பிகை அம்சமாக கருதப்படுகிறது . அதனால் இதை பார்வதி சுயவரம் விருச்சம் என்று பெயர் . கல்யாண தோஷம் நிவர்த்தி செய்ய ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் இவ் விருச்சகத்திற்கு பக்தர்கள் பூஜை செய்கின்றனர் .

* இங்குள்ள விமானம் சாயா விமானம் .

கோவில் அமைவிடம் 

கோயம்பேடு பேருந்து நிலையம் தாண்டி பாலத்தின் இடது புறத்தில் குறுங்காலீஸ்வரர் கோவிலின் அருகில் உள்ளது .
காலை  6.30 முதல் 11.00 வரை மாலை 4 மணி முதல் இரவு  8.45 வரை .

If you want English please click

No comments:

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...